Tamil News

வயதில் மூத்த ஆணுடன் சிறுமிக்கு தவறான உறவு… 19 பேர் பலியான சம்பவத்தில் வெளிவந்த உண்மை

தன்னை விட வயதில் மிகவும் மூத்த ஆண் ஒருவருடன் ஒரு 14 வயது சிறுமி தவறான உறவில் இருந்ததை அறிந்த அவளுடைய ஆசிரியர்கள், அவளது மொபைல் போனைப் பறித்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடாகிய கயானாவில், 14 வயதுள்ள சிறுமி ஒருத்தி தன்னை விட வயதில் மிகவும் மூத்த ஆண் ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்தது தெரியவந்ததால், அவளது ஆசிரியர்களும், ஹாஸ்டல் வார்டனும் அவளைக் கண்டித்துள்ளனர்.

அவளைத் தண்டிக்கும் வகையில், அவர்கள் அவளுடைய மொபைல் போனைப் பறித்துள்ளார்கள். கோபமடைந்த அந்த சிறுமி, இரவு நேரத்தில், தான் தங்கியிருந்த ஹாஸ்டலுக்குத் தீவைத்துள்ளாள்.

அந்த நேரத்தில் ஹாஸ்டல் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால், மாணவ மாணவியரால் தப்பி ஓடிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தீப்பற்றி எரிந்த ஹாஸ்டலுக்குள் சிக்கி 19 மாணவ மாணவியர் உயிரிழந்துவிட்டார்கள். அவர்களில், அந்தப் பெண்ணைத் தண்டித்த ஹாஸ்டல் வார்டனான பெண்ணின் 5 வயது மகனும் ஒருவன்.

வயதில் மூத்த ஆணுடன் சிறுமிக்கு உறவு! 19 பேர் பலியான சம்பவத்தில் தெரியவந்த திடுக்கிடும் உண்மை | Girl Ffair With An Older Man

இந்த பயங்கர சம்பவம் கயானாவில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், தீவைத்த மாணவிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.அந்த சிறுமி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவள் குணமடைந்ததும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட இருக்கிறாள்.

அத்துடன், அவளுடன் தொடர்பு வைத்திருந்த ஆண் மீதும், அவளை வன்புணர்ந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. அவள் அவருடன் விரும்பியே உறவு வைத்துக்கொண்டாலும், அவள் 16 வயதுக்குக் குறைவான வயதுடைய சிறுமி என்பதால், அந்த ஆண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version