Site icon Tamil News

போராட்டக்காரர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற ஆறு பெருவியன் வீரர்கள் மரணம்

நாட்டின் தெற்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து தப்பிச் செல்லும் போது, ஆறு பெருவியன் இராணுவத்தினர், உறைபனி ஆற்றில் குதித்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

புனோ பிராந்தியத்தில் உள்ள இலவ் நகரில் ஜனாதிபதி டினா போலுயார்ட்டின் அரசாங்கத்திற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்லிங்ஷாட்கள் மற்றும் தடிகளுடன் ஆயுதம் ஏந்திய மக்களால் படையினர் தாக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

பெருவிற்கும் பொலிவியாவிற்கும் இடையிலான எல்லையில் உள்ள டிடிகாக்கா ஏரியின் கிளை நதியான இலவே ஆற்றில் இருந்து படையினரின் உடல்கள் மீட்கப்பட்டன.

ஆற்றைக் கடக்க முயற்சித்ததைத் தொடர்ந்து மேலும் ஐந்து வீரர்களும் தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் மேலும் கூறியது.

Exit mobile version