Site icon Tamil News

ஆளுநரிடமிருந்து பறந்த உத்தரவு – பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளான மத்திய பேருந்து நிலையம் , கோட்டை மற்றும் பண்ணை கடற்கரை பகுதிகளை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸாரின் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

குறித்த பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் , சமூக சீர்கேடான விஷயங்கள் உள்ளிட்ட விரும்பத்தகாத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த பகுதிகளில் திடீர் ரோந்து பணிகளை மேற்கொள்ளுமாறும் , இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் இதர பகுதிகளையும் கண்டறிந்து , குற்றச்செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு வடக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version