Site icon Tamil News

கொழும்பிலிருந்து மாலைதீவு நோக்கி பயணித்த விமானம் திடீரென தரையிறக்கம்

மாலைத்தீவு நோக்கி பயணித்த இலங்கை விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறங்கியதாக கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

அப்போது அந்த ஏர்பஸ் ஏ-330 ரக விமானத்தில் 201 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் இருந்த பயணிகளை விரைவில் வேறு விமானங்களில் மாலைத்தீவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாலை 06.30 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் மீதமுள்ள பயணிகளை மாலைதீவுக்கு அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Exit mobile version