Site icon Tamil News

லண்டனில் உள்ள பிரபலமான கட்டிடத்தில் தீவிபத்து : 100 தீயணைப்பு வீரர்கள் குவிப்பு!

லண்டனில் உள்ள ஸ்ட்ராண்ட் பகுதியில் உள்ள ஒரு சின்னமான கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.

15 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கட்டிடத்தின் மேற்கூரையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதால், அதைக் கட்டுக்குள் கொண்டு வர கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version