Site icon Tamil News

அமெரிக்காவில் 6 பேர் உயிரை பறித்த புழுதிப் புயல்

அமெரிக்காவில் புழுதிப் புயல் நீடிப்பதால் சாலையில் பல விபத்துகள் ஏற்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 100 வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக Illinois பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலையில் புழுதிப் புயல் வீசியதால், பயணிகளை ஏற்றிச் சென்ற சுமார் 60 வாகனங்களும், 30 சரக்கு வாகனங்களும் விபத்துக்குள்ளாயின.

சிகாகோ (Chicago) செயின்ட் லூவிஸ் (St. Louis) நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் அந்த விபத்து நேரிட்டது.

2 லாரிகள் தீபற்றியதாகவும் கூறப்படுகிறது. இரண்டிலிருந்து 80 வயதுக்கு இடைப்பட்ட 30 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக இலனோய்க் காவல்துறை தெரிவித்தது.

Exit mobile version