Site icon Tamil News

மலை உச்சியிலிருந்து 300அடி ஆழத்தில் தவறி விழுந்த நாய்

அமெரிக்காவின் ஆரிக்கன் மாநிலத்தில் மலை உச்சியிலிருந்து தவறி பாறைகள் மீது விழுந்த நாயை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

சுற்றுலா பயணி ஒருவர் மலை உச்சியில் தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் விளையாடியபோது அது கால் தவறி 300 அடி ஆழத்தில் கடலை ஒட்டியுள்ள பாறைகள் மீது விழுந்ந்து.

காயமடைந்த நாய், கால்நடையாக சென்றடைய முடியாத பாறைகள் நிறைத்த பகுதியில் பரிதவித்தபடி நின்றது. தகவலறிந்து வந்த கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டரில் ஸ்டிரெட்சருடன் இறங்கி நாயை மீட்டனர்.

Exit mobile version