Site icon Tamil News

மர்மமான முறையில் வைத்தியர் ஒருவர் மரணம்! பொலிசார் தீவிர விசாரணை

தம்புத்தேகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் சடலம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த வைத்தியர் சிலாபத்தில் வசிக்கும் 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version