Site icon Tamil News

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுதருவதாக கூறி மோசடி செய்த தம்பதியினர்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த தம்பதியினர் இன்று (14)  கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கேகாலையில் கைது செய்யப்பட்ட குறித் தம்பதியினருக்கு எதிராக 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், நிலையில், பொலிஸார் நேற்று கைது செய்திருந்தனர்.

வெளி நாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கு ஈடாக மக்களிடமிருந்து 820,000. ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக 46 பேர் முறைப்பாடு செய்ய முன்வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த தம்பதியினரால் ஏமாற்றப்பட்ட வேறு நபர்கள் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exit mobile version