இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஜப்பான் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானின் தாதியர் பராமரிப்பு துறையின் வேலை வாய்ப்புகள் குறித்து அறிவித்துள்ளது.
ஜப்பானின் குறிப்பிட்ட திறன் பணியாளர் திட்டத்தின் (SSW) கீழ் மேற்படி துறையில் ஆண் மற்றும் பெண் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய சான்றிதழ்கள், ஆவணங்களை நவம்பர் 30, 2023 அன்று மாலை 04.30 மணிக்குள் sswrp@slbfe.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.