Site icon Tamil News

இலங்கையில் கல்விச் செயற்பாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் முழு கல்விச் செயற்பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

அரச பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களை விட தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவருக்கு தொழில் சந்தையில் அதிக தேவை உள்ளது.

ஏனெனில் அரச பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இண்டஸ்ட்ரி எக்ஸ்போ – 2024 சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் கலந்து கொண்ட அமைச்சர் நேற்று இதனைத் தெரிவித்தார்.

 

Exit mobile version