Site icon Tamil News

இரத்தினக் கற்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமான முறையில் இரத்தினக் கற்களை தாய்லாந்துக்கு கொண்டு செல்ல முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணிக்கக் கற்களின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் காலி பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய வர்த்தகர் ஆவார்.

சந்தேக நபர் கொண்டு வந்த சூட்கேஸில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரத்தினக் கற்களை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Exit mobile version