Site icon Tamil News

பெரு நாட்டில் பாறையில் விழுந்த பேருந்து : 23 பேர் பரிதாபமாக பலி!

பெரு நாட்டில் பேருந்து ஒன்று பாறையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 656 அடி உயரமுள்ள குன்றின் மீது பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்தின் போது அங்கு 40க்கும் மேற்பட்டோர் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Exit mobile version