Site icon Tamil News

மத்திய இந்தியாவில் பேருந்து ஒன்று டிரக் ஒன்றுடன் மோதி விபத்து : 13 பேர் உயிரிழப்பு!

மத்திய இந்தியாவில் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் சாரதியுடன் சேர்த்து 13 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 16 பேர் தீக்காயம் அல்லது எலும்பு முறிவுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி அனூப் பார்கவா தெரிவித்தார்.

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், மோசமாகப் பராமரிக்கப்படும் சாலைகள் மற்றும் பழைய வாகனங்கள் போன்ற காரணங்களால், கொடிய சாலை விபத்துகள் இந்தியாவில் அடிக்கடி இடம்பெறுகின்றன.

இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 110,000க்கும் அதிகமானோர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version