Tamil News

பிரித்தானிய பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 கிலோவுக்கும் அதிகமான குஷ் கஞ்சாவுடன் பிரித்தானிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 21 வயதுடைய பிரித்தானிய பிரஜை என இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள், விமான நிலையத்தின் கிரீன் அலைவரிசை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.

Exit mobile version