Site icon Tamil News

யாழில் சாரதி மீது சரமாறியாக வாள்வெட்டு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை மணியத்தோட்டம் 11வது குறுக்கு வீதியில் நிறுத்தி, சாரதியான வினாசித்தம்பி ஜெகதீஸ்வரன் என்பவரை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மூடிக் கொண்டு வந்தவர்கள் சரமாரியாக வெட்டினர்.

குறித்த சம்பவம் இன்று மாலை நடைபெற்றது.

இச்சம்பவத்தினால் சாரதியின் கைகளில் காயம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சுமார் 05 நாட்களுக்கு முன்னர் யாழ்.பஸ் நிலையத்தில் சில யுவதிகளை அசௌகரியப்படுத்தும் வகையில் 04 இளைஞர்கள் கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மேற்படி காயமடைந்த நபர், சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு அறிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி குறித்த இளைஞர்கள் சாரதியை காயப்படுத்தியுள்ளதாக காயமடைந்தவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிடுவதுடன் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version