Site icon Tamil News

பிரான்ஸில் பொலிஸ் அதிகாரியின் மோசமான செயல்

பிரான்ஸில் பொலிஸ் அதிகாரியின் மோசமான செயல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவர் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ளார். 45 வயதுடைய Xavier P எனும் பொலிஸ் அதிகாரி எசோன் மாவட்டத்தில் பணிபுரிகிறார்.

2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டுக்கு இடையிலான காலத்தில் அவர் மூன்று பெண்கள் மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், இரண்டு மாதங்களின் பின்னர் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மனநலம் பரிசோதிக்கப்படுவதற்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.

Exit mobile version