Site icon Tamil News

முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் 3 வயது குழந்தை பலி! மூவர் படுகாயம்

கடவல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

நீர்கொழும்பில் இருந்து மரதகஹமுல நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் குறித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version