Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் லிப்டில் சிக்கிய 10 வயது மாணவன் பரிதாபமாக பலி

சிட்னி பாடசாலை லிப்டில் சிக்கிய 10 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தீயணைப்புத் துறையினர் மற்றும் நிவாரணப் பணியாளர்கள் வந்து லிப்டை அகற்றியதாகவும், ஆனால் மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய நேரப்படி இந்த விபத்து இன்று பிற்பகல் 02 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், சிட்னியின் மேற்கில் மற்றொரு பாடசாலைக்கு அருகில் ஏற்பட்ட கடுமையான தீ காரணமாக பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் ஒருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

Exit mobile version