Site icon Tamil News

அமெரிக்காவில் 8,300 கோடி மோசடி செய்த இந்திய-அமெரிக்கர்

அமெரிக்காவில் சிகோகோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முன்னாள் நிர்வாகிகளான இந்திய வம்சாவளியை சேர்ந்த 38 வயது ரிஷி ஷா, 38 வயது ஷ்ரதா அகர்வால் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 35 வயது பிராட்பர்டி ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து 1 பில்லியன் டாலர் மோசடி செய்ததாக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ரிஷி ஷாவுக்கு 7 ஆண்டு 6 மாதம் சிறை தண்டனையும், ஷ்ரதா அகர்வாலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிராட் பர்டிக்கு 2 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு முன் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஷா, அகர்வால், பர்டி மற்றும் முன்னாள் தலைமை வளர்ச்சி அதிகாரி ஆஷிக் தேசாய் ஆகியோருக்கு எதிராக அமெரிக்க செக்யூரிட்டீஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் சிவில் வழக்கையும் தாக்கல் செய்தது.

Exit mobile version