Site icon Tamil News

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் பலி

காசா நகரின் அல்-ஜலா தெருவை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

மேலும் 10 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காசா பகுதிக்கு தெற்கே உள்ள கிழக்கு கான் யூனிசில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version