Site icon Tamil News

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தாய்வான் நாட்டின் யிலான் (Yilan) பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானதாக தைவானின் மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உடனடியாக பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தைவான் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து, தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தலைநகர் தைபேயில் உணர முடிந்தது. ஏப்ரல் மாதம் 17 பேரைக் கொன்ற 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தைவானின் பூகம்பத் தயார்நிலை கடந்த சில தசாப்தங்களாக அழிவுகரமான நிலநடுக்கங்களுக்கு பதிலளிக்கும் வகையில் வலுப்பெற்றுள்ளது.

Exit mobile version