Site icon Tamil News

கலிபோர்னியாவில் பெற்றோர் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 வயது சிறுவன்

4 வயது சிறுவன் லான்காஸ்டரில் ஒரு தோட்டா தாக்கியதில் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது ஒரு நபர் ஒரு குடும்பத்தின் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. சிறுவன் பின்புறம் அமர்ந்திருந்த நிலையில் மேல் உடலில் துப்பாக்கியால் சுட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார்.

லான்காஸ்டரில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் கொலையாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.

29 வயது ஆணும் 27 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி சிறையில் சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Exit mobile version