Site icon Tamil News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 39 பலஸ்தீன கைதிகள் விடுவிப்பு!

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே அறிவிக்கப்பட்ட தற்காலிக போர்நிறுத்தத்திற்கு இணையாக இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 39 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பணயக்கைதிகள் பரிமாற்றத்தின் மூன்றாம் நாளில் இந்த பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

13 இஸ்ரேலிய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ததன் எதிரொலியாகவே இந்த குழு விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, நேற்று (26.11) ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதிகள் குழு தற்போது இஸ்ரேலை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நான்கு நாள் போர் நிறுத்தத்தின் போது 50 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய உள்ளது. அதற்கு பதிலாக, 150 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

மேலும் மனிதாபிமான உதவிகளும் தற்போது காசா பகுதிக்குள் சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே அறிவிக்கப்பட்ட தற்காலிக போர்நிறுத்தத்தின் இரண்டாம் நாள் முடிவில், காசா பகுதியில் பிடிபட்டிருந்த 41 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version