கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 126 குழந்தைகள் உட்பட 324 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, அந்த காலகட்டத்தில் 88 பெண்கள் கொல்லப்பட்டனர், 1,018 பேர் காயமடைந்தனர்.
மேலும் பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதனால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக காசாவின் வடக்கு பகுதியில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்றுஇஸ்ரேல் ராணுவம் கெடு விடுத்துள்ளது