Site icon Tamil News

புர்கினோ பசோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பொதுமக்கள் பலி!

புர்கினா பாசோவின் மேற்கில் உள்ள ஒரு கிராமத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mouhoun மாகாணத்தில் Youlou கிராமத்தில்  மௌஹூன் ஆற்றின் அருகே உள்ள வயல்களில் குடியிருப்பாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த பொழுது  தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண ஆளுநர் பாபோ பியர் பாசிங்கா இந்தத் தாக்குதலை “கோழைத்தனமானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது என விவரித்தார்.

தீவிரவாதிகளை ஒடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளுநர் தெரிவித்தார்.

Exit mobile version