Site icon Tamil News

இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட 3 பாலஸ்தீனியர்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெற்கு மேற்குக் கரையில் ஹெப்ரோன் அருகே உள்ள துரா நகரில் இஸ்ரேலிய ராணுவத்தினருடனான மோதலின் போது இரண்டு பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ பாலஸ்தீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

22 வயதான முகமது ஹசன் அபு சபா, இஸ்ரேலியப் படைகளால் இதயத்தில் சுடப்பட்டதால் இறந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

23 வயதான அஹத் மஹ்மூத் முகமது தலையில் சுடப்பட்டதால் இறந்தார் என்று துரா அரசு மருத்துவமனை இயக்குனர் கூறினார்.

மூன்றாவது நபரின் அடையாளங்கள் வழங்கப்படவில்லை.

மேலும் 10 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் 100 பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவை நோக்கி தமது படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.

சுடப்பட்ட நபர் ஒரு தீக்குண்டை வீசியதாக இராணுவம் கூறியது, ஆனால் அது குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை வழங்கவில்லை.

Exit mobile version