Site icon Tamil News

கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஷிரூர் கிராமத்திற்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை 66ல் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் பலியாகியிருக்கலாம் என கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தெரிவித்துள்ளார்.

போலீஸ் அதிகாரி ஒருவர் : தேசிய நெடுஞ்சாலை 66ல் உணவகத்தை நடத்தி வந்த 47 வயதான லக்ஷ்மண் நாயக் மற்றும் அவரது 36 வயது மனைவி சாந்தி நாயக் உட்பட மூன்று உடல்களை நாங்கள் இதுவரை மீட்டுள்ளோம்.

” 11 வயது ரோஷன், 6 வயது அவந்திகா மற்றும் 55 வயது ஜெகநாத்ஆகியோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என்று அமைச்சர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சாலையோர உணவகத்தின் மீது மலையின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Exit mobile version