Site icon Tamil News

அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கி 3 இந்திய மாணவர்கள் பலி!

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் அமெரிக்கவாழ் இந்திய மாணவர்களில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜியா மாகாணம் அல்பாரெட்டா பகுதியில் நடந்த கார் விபத்தில் ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தின்போது காரில் இருந்த ரித்வாக் சோமேபல்லி மற்றும் முகமது லியாகாத், அன்வி சர்மா ஆகிய 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அன்வி சர்மா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இந்த விபத்து குறித்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த ஷ்ரியா அவர்சாலா மற்றும் அன்வி சர்மா ஆகிய இருவரும் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்து வந்ததாகவும், ஆர்யன் ஷர்மா அங்குள்ள ஆல்பாரெட்டா உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்ததாகவும், அவர் இந்த பள்ளியின் கிரிக்கெட் அணியிலும் விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.

Exit mobile version