Site icon Tamil News

இலங்கையில் கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி: மூவர் பலி: ஆபத்தான நிலையில் மேலும் மூவர்

கடலுக்குச் சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் மதுபானம் என நினைத்து போத்தலில் இருந்த விசக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

தங்காலை கடற்பகுதியில் இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

அத்துடன், கரைசலை குடித்த மேலும் மூன்று கடற்றொழிலாளர்கள் மோசமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

படகில் இருந்த தகவல் அனுப்பும் இயந்திரங்கள் ஊடாக குறித்த செய்தி கரைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டிலில் உள்ள திரவம் மற்றும் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version