Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை பௌத்த விகாரை ஒன்றில் 3 சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்

மெல்பேர்ணில் உள்ள இலங்கை பௌத்த விகாரை ஒன்றின் விஹாராதிபதிக்கு எதிராக 03 சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

68 வயதான அவர் இன்று மெல்பேர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

1996ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 13 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மெல்போர்னின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த ஆலயம் ஒரு தாம் பாசல் எனப்படும் பௌத்த மாணவர்களுக்கான வகுப்பறை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஸ்பிரிங்வேல் மற்றும் கீஸ்பரோவை அண்மித்த பகுதிகளில் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக இன்று நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

விஹாராதிபதிகள் தற்போது பிணையில் உள்ளனர், அடுத்த விசாரணை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version