Site icon Tamil News

அவுஸ்திரேலியா கடற்கரையில் இலங்கையர் என கூறப்படும் இளைஞனின் சடலம் மீட்பு

அவுஸ்திரேலியாவின் டிரான்மீர் கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.40 மணியளவில் பிரதேசவாசி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் பொலிசார் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

இது சந்தேகத்திற்கிடமான மரணமாக இருக்க முடியாது எனவும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 18 – 25 வயதுக்கு இடைப்பட்ட இலங்கையர் என நம்புவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் உயிரிழந்தவரின் அடையாளத்தை இதுவரையில் கண்டறியாத பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்த நபர் வேறு இடத்தில் கடலில் விழுந்து மீண்டும் அழைத்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும், எனினும் இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version