Site icon Tamil News

சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டு பெறும் 2,678 இலங்கையர்கள்

தமிழகத்தில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையருக்கு சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் 2,678 இலங்கையரின் பட்டியல், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு கிடைத்துள்ளது.

2,678 பேரில், இலங்கை பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகிய இரண்டையும் கொண்டவர்களுக்கு சகல நாட்டு கடவுச்சீட்டுகளையும் வழங்க முடியும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பிலே, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

Exit mobile version