அமெரிக்காவில் 2013ஆம் ஆண்டிருந்து பதிவான 250 தீச்சம்பவங்கள் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான Samsung அடுப்புகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
சுமார் 40 பேர் காயமடைந்தனர். 7 தீச்சம்பவங்களில் செல்லப்பிராணிகளும் உயிரிழந்துள்ளன. குறைந்தது 18 சம்பவங்களில் வீடுகள் கடுமையாகச் சேதமடைந்தன. டுப்புகளின் முகப்பில் உள்ள பொத்தான்களைத் தொடும்போது தீ மூட்டப்படுகிறது.
தீ தவறுதலாக மூட்டப்படுவதுண்டு என்று Samsung குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் வெவ்வேறு ரகங்களைச் சேர்ந்த அடுப்புகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அம்சம் பொருத்தப்பட்டுள்ள அடுப்புகளைப் பயன்படுத்தும்படி வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.