Site icon Tamil News

பொலிஸ் கான்ஸ்டபிள் பற்றி தகவல் கொடுத்தால் 25 லட்சம் சன்மானம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளைப் பற்றி தகவல் வழங்குவோருக்கு 25 இலட்சம் ரூபா சன்மானம் வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

முனியபாலைச் சேர்ந்த சந்தேகநபர் பொலிஸ் கான்ஸ்டபிள் ரவிந்து சந்தீப குணசேகர செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் தலைமறைவாகியுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு – 071 8591960, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு நிலையத் தளபதி பிரிவு (1) – 0718596150

Exit mobile version