Site icon Tamil News

24 மணி நேர வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கும் சுகாதார ஊழியர்கள்!

சுகாதார ஊழியர்கள் நாளை (24.08) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

07 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர்  சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “துணை மருத்துவ சேவைகள் தொடர்பான 05 தொழிலாளர்கள் 24 மணி நேர வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வக விஞ்ஞானிகள், மருந்தாளுநர்கள் மற்றும் உடல் சிகிச்சையாளர்கள் மற்றும் தொழில்சார் சிகிச்சையாளர்கள் ஆகிய ஐந்து தொழில்முறை குழுக்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து தொழிற்சங்கங்கள் தமது 07 கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக, CT சோதனைகள், எக்ஸ்ரே சோதனைகள், MRI சோதனைகள், அனைத்து ஆய்வக சோதனை சேவைகள். மேலும், மருந்து விநியோகம், விநியோகம் என அனைத்து சேவைகளும் முடங்கிக் கிடக்கின்றன’’ என்றார்.

Exit mobile version