Site icon Tamil News

24 மணி நேரத்தில் 40இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை முறியடித்துள்ளதாக உக்ரைன் அறிவிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் 40க்கும் மேற்பட்ட எதிரி தாக்குதல்களை முறியடித்துள்ளதாக உக்ரேனிய ஆயுதப்படைகளின் பொதுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் 53 ரொக்கெட் தாக்குதல்கள், ஐந்து ஏவுகணைத் தாக்குதல்கள், 18 வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள லைமன்,  பாக்முட், அவ்திவ்கா மற்றும் மரிங்கா ஆகிய இடங்களில் மொஸ்கோ தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. தாக்குதல்களுக்கு ஏற்றபடி உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதன்படி  உக்ரேனிய விமானப்படை,  ரஷ்ய துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்களின் செறிவு மீது ஆறு வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

Exit mobile version