Site icon Tamil News

24 மணி நேரமும் மது பாட்டில்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மதுபான கடையில் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும்.

இந்த நிலையில் மாவட்டத்தில் 24 மணி நேரமும் மதுபான கடைகளுக்கு அருகில் உள்ள டாஸ்மார்க் பாரில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதால் மது பிரியர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்,

ஆனால் அவர்களின் வீட்டில் உள்ள பெண்கள் திண்டாட்டத்தில் உள்ளனர் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை காவல்துறைக்கு மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால்

நூதனமான முறையில் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பாஜக தகவல் தொடர்பு அணி சார்பில் இன்று காலை புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மார்க் மதுபான கடை அருகே பாஜகவினர் 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் 24 மணி நேரமும்

சிறப்பாக செயல்பட்டு மது விற்பனையில் ஈடுபட்டு வரும் டாஸ்மார்க் பணியாளர்கள் மற்றும் டாஸ்மார்க் பார் பணியாளர்களை பாராட்டி கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் டாஸ்மார்க் பார் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களுடைய எதிர்ப்பை நூதன முறையில் தெரிவித்தனர்.

 

Exit mobile version