Site icon Tamil News

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் கைது!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீன்பிடி படகுகளும், 21 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது படகுகளையும் மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்று (06.12) கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த  மீனவர்கள்  தலைமன்னாரம் ஜெட்டி மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னாரம் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் ஆய்வு அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Exit mobile version