Site icon Tamil News

பிரான்ஸ் தலைநகரில் விபத்துக்குள்ளான 2 படகுகள் – 16 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

port of Grenelle பகுதியில் சென் நதியில் இரு படகுகள் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற நிலையில், இரவு 11 மணிக்கு பின்னதாக இரு படகுகளும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.

இச்ச்ம்பவத்தில் மொத்தமாக 16 பேர் இலேசான காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version