Site icon Tamil News

1998ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு – அஞ்சலி செலுத்திய மோடி

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி முதல் முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே இருந்து திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணியை தொடங்கினார்.

இதையடுத்து, 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

இந்த குண்டுவெடிப்பில் 58 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version