Site icon Tamil News

ஸ்பெயினில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் பலி

ஸ்பெயினின் முர்சியா நகரில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் நம்புகின்றனர்.

மேலும் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

22-25 வயதுடைய இரண்டு யுவதிகளும் 41 மற்றும் 45 வயதுடைய இரண்டு ஆண்களும் காயமடைந்துள்ளனர்.

தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்ததால் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முர்சியா எமர்ஜென்சி சர்வீசஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன, ஆனால் தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version