Site icon Tamil News

இங்கிலாந்து-இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகும் அறிகுறிகள்

பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுக்கள் வேகம் பெற்றுள்ளன, ஒப்பந்தத்தை இறுதி செய்ய தேவையான சேவைகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய கூடுதல் ஆய்வுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய பிறகு, சுதந்திர வர்த்தக நாடாக தனது நிலையை நிலைநிறுத்திக் கொள்ளும் நம்பிக்கையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கியது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பேச்சு வார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்ததாகத் தோன்றினாலும், இரு தரப்பும் பல முக்கியத் துறைகளில் முன்னேற்றம் காண கடுமையாக உழைத்து வருகின்றன.

ஆனால், சமீபத்தில் நடைபெற்ற பதினொன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை முடிவடைந்ததையடுத்து அதற்கான ஆர்வம் மேம்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சேவைகள் மற்றும் கட்டணங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாததை ஒரு பிரச்சனையாக கருதக்கூடாது என பிரிட்டன் கருத்து தெரிவித்துள்ளது.

இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வர்த்தக செயலாளர் சுனில் பார்த்வால் இருவரும் பேச்சுவார்த்தைக்காக லண்டன் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தை முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும், இந்தச் சுற்றில் அமைச்சர்கள் பங்கேற்றது பேச்சுவார்த்தைக்கு ஏற்பட்ட தடைகளை சமாளிக்க உதவியது என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version