Site icon Tamil News

கொழும்பில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம் – மர்ம மாணவனை தேடும் பொலிஸார்

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் 8 தடவைகள் பாரிய வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சிறுமியின் உடலின் சில பாகங்கள் சிகரெட்டினால் சுடப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நேற்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி ஒருவருக்கே இச்சம்பவம் நேர்ந்துள்ளது.

சிறுமியை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமி தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் பெறப்பட்ட சட்ட வைத்திய அறிக்கைகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொண்டு, சிறுமியை அவரது தாயின் பராமரிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

துஷ்பிரயோகத்திற்குட்பட்ட மாணவியின் நடத்தையில் மாற்றம் காணப்பட்டதை அவதானித்த பாடசாலை ஆசிரியர் சிறுமியை வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

அதற்கமைய, சிறுமியை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, ​​சிறுமி 8 தடவைகள் பாரிய பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இந்த துஷ்பிரயோகம் தொடர்பில் கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவரின் பெயரை குறித்த மாணவி குறிப்பிடப்பட்டுள்ளார். அதற்கமைய, குறித்த பெயரில் உள்ள அந்த பாடசாலை மாணவர்கள் அனைவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சிறுமியிடம் காட்டப்பட்டுள்ளதாகவும், ஆனால் சிறுமி சம்பந்தப்பட்ட மாணவனை அடையாளம் காணவில்லை.

அதற்கமைய, சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version