Tamil News

லிபியாவில் வெள்ளத்தில் 11300 பேர் உயிரிழப்பு

லிபியாவில் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,300 ஆக உயர்ந்துள்ளது 10,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியா மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள ஒரு வட ஆப்பிரிக்க நாடு. அந்த கடலில் உருவான டேனியல் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு லிபியாவை கடந்தது. இதனால் அங்கு பலத்த மழை பெய்தது. மேலும், புயல் தாக்கியது. இதனால் அப்பகுதியில் ஓடும் வாடி டோனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணையின் முழு கொள்ளளவும் திறக்கப்பட்ட நிலையிலும், ஆற்றின் குறுக்கே இருந்த இரண்டு தடுப்பணைகள் உடைந்தன.

இதையடுத்து, அருகில் உள்ள டோனா நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. வாடி டோனா உருவாகும் மலைப் பகுதிக்கும், மத்தியதரைக் கடலில் கலக்கும் முகத்துவாரத்துக்கும் இடையே டோனா நகரம் அமைந்திருப்பதால், அணையை உடைத்து வெள்ள நீர் ஊரில் உள்ள வீடுகள், வாகனங்கள் கடலில் கலந்தது.

இந்த வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,300 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 10,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். வாடி டோனா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள் தற்போது உடைந்து ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளதாக நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Exit mobile version