Site icon Tamil News

ஈக்வடோரில் மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிபிரயோகம்!

ஈக்வடாரில் மற்றொரு ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஈக்வடார் நாட்டின் முன்னாள் துணை அதிபரும் ஓட்டோ சோனென்ஹோல்ஸ்னர் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரத்தின் போதே  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தன்னை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து துரித விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈக்வடார் ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ கடந்த வாரம் பிரச்சாரக் கூட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

Exit mobile version