Site icon Tamil News

பப்புவா நியூ கினியாவில் இடம்பெற்ற மோதலில் 08 பேர் பலி!

பப்புவா நியூ கினியாவின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் கொள்ளையினால் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பள பிரச்சினை காரணமாகவே அந்நாட்டு பொலிஸார் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னரே இந்த மோதல்கள் இடம்பெற்றதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடைகள், பல்பொருள் அங்காடிகளை சூறையாடியும், வாகனங்களை எரித்தும் நகரவாசிகள் கலவரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் ஜேம்ஸ் மாரப், சட்டத்தை மீறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், மோதல் நிலைமை படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Exit mobile version