Site icon Tamil News

ஹப்புத்தளையில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளான மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

ஹப்புத்தளை பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தம்பேதன்ன மஹகந்த பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் இவ்வாறு ஹப்புத்தளை பங்கெட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் மூவரும்  வீட்டிலிருந்தபோதே  மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  42,  21 மற்றும் 17 வயதுடைய மூவரே மின்னல் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள்  என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version