Site icon Tamil News

ஸ்ரீ புலிக்குட்டி அய்யனார் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

ஆவுடையார்கோவில் தாலுகா கருங்காடு கிராமத்தில் எழுந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ பூர்ணபுஷ்கலா அம்பிகை சமேத ஸ்ரீ புலிக்குட்டி அய்யனார் ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 25ம் தேதி சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3நாட்களாக 4கால யாக பூஜை நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் புலிக்குட்டி அய்யனார் சாமி அருள் பெற்றுச் சென்றனர்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிகழ்வை அக்கிராமத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்

 

Exit mobile version