Site icon Tamil News

வெளிநாடொன்றில் சிக்கி தவித்து நாடு திரும்பிய 48 இலங்கை

குவைட்டிற்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு எல் 230 என்ற விமானத்தில் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

குவைட்டுக்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட இலங்கையர்கள் குவைட்டுக்கான இலங்கை தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கைக்கான தூதரகத்தின் நடவடிக்கையால் 48 இலங்கையர்களும் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

38 பெண்களும் 10 ஆண்களுமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Exit mobile version